25 வயதில் ஓய்வு முடிவை அறிவித்த உலகின் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனை!

டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக உலகின் முதல்நிலை வீராங்கனையான 25 வயதான ஆஷ்லே பார்ட்டி அறிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறையில் பல கனவுகள் உள்ளதாகவும், ஆனால் உலகம் முழுவதும் சுற்றி தனது குடும்பத்தையும் சொந்த ஊரையும் பிரிந்து இருக்க தன்னால் முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் டென்னிஸ் விளையாட்டை தான் மிகவும் நேசிப்பதாகவும், தனது வாழ்வில் அது என்றும் ஒரு அங்கமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

தனது வாழ்வின் அடுத்த பகுதியை ஒரு விளையாட்டு வீராங்கனையாக இல்லாமல், ஒரு சாதாரண நபராக அனுபவிக்க விரும்புவதாக ஆஷ்லே பார்ட்டி தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் 15 சம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ள அவர், அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ், 3 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 2021 விம்பிள்டன், 2019 பிரன்ஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆகியவற்றை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *