யாழில் வெடித்து போராட்டம் – பெருந்திரளானோர் பங்கேற்பு

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் இன்று பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பு,அரசியல் கைதிகளின் விடுதலை ,இந்திய மீன்வர்களின் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் ஆரம்பமான போராட்டப் பேரணி,மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றது.

மேலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், மாவட்ட மீனவ ஒத்துவைப்பு இயக்கம்கள்,வடமாகாண கடற்தொழிலாளர் இணையம்,கிராமிய உழைப்பாழர் சங்கம்,பூந்தளிர் பெண்கள் அமைப்பு யாழ்ப்பாணம்,அரும்புகள் பெண்கள் அமைப்பு கிளிநொச்சி,வளர்பிறை பெண்கள் அமைப்பு மன்னார்
,வடமராட்சிகிழக்கு பிரஜைகள் குழு,மாற்றத்துக்கான இளைஞர் அணி ஆகிய அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

அத்துடன் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் உடன் விடுவிக்கப்படவேண்டும்,இதுவரையும் மீள் குடியேற்றம் செய்யப்படாதமக்கள் உடன் மீள் குடியமர்த்தப்படவேண்டும்,இந்திய இழுவைப்படகு மற்றும் தென்பகுதி மீனவர்களின் வருகை சட்டவிரோத மீன்பிடி முறைகளை தடுத்து நிறுத்தப்படவேண்டும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட் உறவுகளுக்கான நீதி உடன் வழங்கப்படவேண்டும்,அரசியல் கைதிகள் அனைவரும் உடன் விடுதலை செய்யப்படவேண்டும்,காணி அற்ற மக்களுக்கு குடியிருக்க காணிகள் வழங்கப்பபடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *