
கொழும்பு, மார்ச் 23: உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைந்தால், உள்நாட்டிலும் அதன் விலையைக் குறைக்கத் தயார் என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றில் அவர் கூறுகையில் “கடந்த பெப்ரவரி மாதம் இருந்த விலையின் அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா யுத்தம் காரணமாக, மார்ச் மாதம் சர்வதேச சந்தையில், எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 130 டொலர் வரை அதிகரித்தது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை வீழ்ச்சியடைந்தால் நாங்களும் விலை குறைப்பை செய்யத் தயார் என்றார் அவர்.