
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சமய வணக்கஸ்தலங்கள் அரசின் திறைசேரிக்கு நிதி வழங்க முன்வரவேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்ற அனைத்து வழிபாட்டு தலங்களும் ஒன்றிணைய வேண்டும்.
வசதி படைத்த வழிபாட்டுத் தலங்கள் ,தமது செல்வங்களை திறைசேரிக்கு வழங்கினால், எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் மாற்றத்தை காண முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.