ஜனாதிபதிபதி தலைமையில் நடைபெறும் சர்வகட்சி மாநாட்டில் 26 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு தற்போது அலரிமாளிகையில் இடம்பெற்று வருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட 26 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மாநாட்டை புறக்கணித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *