இத்தாலி விஜயத்தின்போது பாப்பரசரை சந்திக்க திட்டமில்லை – பிரதமர் ஊடகப்பிரிவு

இத்தாலி விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள பிரதமரின் ஊடகப்பிரிவு  இந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென தெரிவித்துள்ளது.

அத்தோடு, போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தப்பரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *