
சொந்தக்காணி இருந்தும் அகதிகளாக வாழ்கிறோம் என யாழ் வலி.வடக்கு பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
30 வருடங்களாக அகதி வாழ்வு வாழ்கின்றோம். யுத்த காலம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகின்றது. எனினும் சொந்த காணிகளில் குடியமர்த்தப்படாமல், அக்காணிகளில் இராணுவ படையினர் தென்னை மரங்களை நடும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே மக்களின் காணிகளை விடுவித்து அக்காணிகளில் மீளக் குடியமர்த்த வேண்டும் .இதனை உரிய தரப்பினர் உறுதிப்படுத்தி தர வேண்டும் என்றனர்.