
தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இன்று பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்ப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கு காரணமாக அமைந்த அரசியல் காரணிகளை சுட்டிக்காட்டி இந்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது தெல்கந்த முதல் நுகேகொட வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.