பதவி விலகினார் பஸிலின் விசுவாசி!

கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லான்சா இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு நேற்று அனுப்பிவைத்துள்ளார்.
நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நேரத்தில், வெறுமனே அதனை வேடிக்கை பார்க்க முடியாது .

எனவே, சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றுக்கு அப்பால் மனச்சாட்சியின் பிரகாரமே இந்த முடிவை எடுத்தேன் என்று நிமல் லான்சா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்சவின் விசுவாசியாக செயற்பட்டுவந்த நிமல் லான்சா, அண்மைக்காலமாக அரசுடன் முரண்பட ஆரம்பித்தார்.
இதனால் ஒரு மாதத்துக்கு முன்னரே அமைச்சு பக்கம் செல்வதை நிறுத்திக்கொண்டார். தனது தனிப்பட்ட ஆளணிப் பிரிவையும் அமைச்சில் இருந்து விலக்கிக்கொண்டார்.

அதன்பின்னர் நான்கு காரணங்களை முன்வைத்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று பதவி துறக்கும் அறிவிப்பை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *