
கொழும்பு, மார்ச் 23
தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு தீர்மானித்திருப்பதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலண்ட் இதனைத் தெரிவித்தார்.
மேலும், மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறும் அமெரிக்கா இலங்கையை அறிவுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.