மஹிந்தவுக்கு எதிர்ப்பு, பொலிஸார் விசாரணை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தபோது எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நுணாவிலில் உள்ள சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைகளுக்காக சமுகமளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்தபோது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றிருந்த நிலையில், மட்டுவில் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டதுடன், பொலிஸாரால் பலப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *