
வடமாகாண மக்களுக்கான மருத்துவ சேவையை மேம்படுத்தும் பொருட்டு யாழ் போதனா மருத்துவமனைக்கு இரண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் ஆளணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இராண்டாவது பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் ஆளணி உருவாக்கம் சம்பந்தமாக யாழ் போதனா மருத்துவமனையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல தடவைகள் சுகாதார அமைச்சுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் மேற்கொண்ட பேச்சுக்கள் மற்றும் அது சார்ந்த முயற்சியின் பயனாகவே இந்த ஆளணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.