VAT-இல் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதி

கொழும்பு, மார்ச் 23: பெறுமதி சேர் வரியில் (VAT) திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்க நிதிக் குழு அனுமதி அளித்துள்ளது.

பெறுமதி சேர் வரி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரச நிதிக்குழு இந்த அனுமதியை அளித்துள்ளது.

இதற்கமைய கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு பெறுமதி சேர் வரியானது 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

குறித்த திருத்தச் சட்டமூலம் நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *