
இலங்கை அரசுக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் ,நுகேகொடையில் ஆரம்பமான போராட்ட பேரணி, தற்போது பேர் எழுச்சியுடன் நகர்ந்து வருகிறது.
குறித்த பேரணி காரணமாக நுகேகொட தெல்கந்தவில் பகுதியில் கூடுதலான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் விஜேராம சந்தியில் இருந்து நுகேகொட நோக்கி செல்லும் ஹைலெவல் வீதி முழுவதுமாக தடைப்பட்டுள்ளது.