
74 வருட சாபத்தை நாட்டில் இல்லாமல் ஒழிக்க ,தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் இணைந்துள்ளனர் என ஜெ.வி.பி தெரிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கு எதிராக, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது.ஆகவே மக்கள் கேட்கின்றனர் இவை எல்லாவற்றிலும் இருந்து விட பட வேண்டும் என்று.கோட்டா ,பசில் ,மகிந்த ஆகியோர் நாட்டை காப்பாறுவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள்.
ஆனால் இப்போது நாட்டையே விற்றுவிட்டார்கள்.மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு உள்ளது.இதனால் மக்கள் வீதிக்கு இறங்கியும் கேட்டுப் பார்த்தார்கள் இன்று வரை பதில் இல்லை.ஆகவே இந்த சாப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்.இந்த போராட்டம் நகரம் முதல் கிராமம் வரை முன்னெடுப்போம்.இது மக்களுக்கான ஆட்சியாக இது அமையும்.அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றார்.