யாழில் திடீரென களமிறங்கிய முக்கிய குழுவினர் – பலர் சிக்கினர்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் தீவிரமாக இடமபெறும் என சபை அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களால் மாவட்ட இணைப்பதிகாரியின் தலைமையில் இன்றும் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதனடிப்படையில் Litro, Laugh முகவர்களினை சந்தித்து சில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.

எரிவாயு விநியோகத்தில் விநியோகத்தின் விபரங்களை அதிகாரசபையினால் வழங்கப்பட்ட
படிவத்தினை நிரப்புவதன் மூலம் பெறவேண்டும்.பிரதேசரீதியாக தங்களிடம் இருப்பிலுள்ள எரிவாயுக்களை பிரித்து முகவர்களே பங்கீட்டு அட்டைமுறையில் வழங்குதல் வேண்டும்.

இயன்றவரை வியாபார நிலையங்களுக்கு இருப்பிலுள்ள 1/3 பகுதியையேனும் வழங்க
முன்வரவேண்டும்.பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவகையில் விநியோக இடத்தில்
விநியோகிக்க வேண்டும்.

எரிவாயு விநியோகம் தொடர்பான அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட
வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன், முறைகேடான வியாபார நிலையங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் எரிபொருள் நிலையங்கள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்புக்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *