முல்லைத்தீவில் சீறிப்பாய்ந்த காளைகள் – களை கட்டிய மாட்டு வண்டிச் சவாரி

முல்லைத்தீவு வற்றாப்பளை நந்திக்கடல் கரையில் அமையப்பெற்ற கண்ணகி மாட்டுவண்டில் சவாரித்திடல் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் க.சிவமோகன்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சவாரி திடல் திறப்பு நிகழ்வினை தொடர்ந்து மாட்டுவண்டி சவாரிபோட்டி நடைபெற்றது.
வடமாகாணத்தினை சேர்ந்த 72 சோடி மாடுகள் இதில் கலந்து கொண்டன.
அ,ஆ,இ,ஈ,உ ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதன்போது அ- பிரிவில் முதற்பரிசான தங்கப்பதக்கத்தினை யாழ்ப்பாணம் சங்குவேலியினை சேர்ந்த கே.சந்திரன் பெற்றுக்கொண்டார்.

ஆ-பிரிவில் தங்கப்பதக்கத்தினை யாழ்ப்பாணம வட்டுக்கோட்டையினை சேர்ந்த விக்னேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

இ-பிரிவில் தங்கப்பதக்கத்தினை மல்லாவி முல்லைத்தீவினை சேர்ந்த த.மனோசாந் பெற்றுக்கொண்டார்.

ஈ-பிரிவில் தங்கப்பதகத்தினை யாழ்ப்பாணம் பொன்னாலையினை சேர்ந்த க.றிஜிதா பெற்றுக்கொண்டார்.

உ-பிரிவில் தங்கப்பதக்கத்தினை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையினை சேர்ந்த முகேஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.

5 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டில் முதலாம் இடத்தை பெற்ற மாட்டுவண்டில்களுக்கு தங்கப்பதக்கமும் இரண்டாட்,மூன்றாம் இடத்தினை பெற்ற வண்டில்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கையில் மாடு கொண்டு ஓடுதல்போட்டி மற்றும் வேகம் குறைவாக மோட்டார் சைக்கில் ஓட்டுதல் போன்ற போட்டிகளும் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *