பளை பேராலையில் பாரிய சத்தத்துடன் இடி விழுந்துள்ளது!

பளை – பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர்.

இதன்போது பாரிய சத்தத்துடன் மின்னல் வீட்டின் கூரை பகுதியிலேயே தாக்கியுள்ளது.

இதனையடுத்து மின் குமிழ்களும் வெடித்து சிதறியுள்ளது மின்சாரமும் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

தெய்வாதீனமாக வீட்டில் இருந்த எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *