மிகைவரி திருத்த சட்டமூலம் நாளை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது!

2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி இடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் வகையில் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நிதிச் சேவைகளை வழங்குவதற்கான மிகைவரி 15 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஏதேனும் தொற்றுநோய் அல்லது அவசர நிலைமையின் போது அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சிற்கு வழங்கப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ நன்கொடைகளுக்கு மாத்திரம் பெறுமதிசேர் வரி விலக்கு அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மிகைவரி திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *