
கொழும்பு, மார்ச் 23: கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கொகேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரும்பு பொருட்கள் இருந்த கொள்கலன் ஒன்றில் இருந்தே இந்த போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த கொக்கெயினின் சந்தைப் பெறுமதி 6,000 மில்லியன் (600 கோடி) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பனாமாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே குறித்த கொகேய்ன் மீட்கப்பட்டதாகவும், குறித்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கொண்டுசெல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். .