
எரிபொருள் தட்டுபாட்டால் நுவரெலியா நகரத்தில் அதிகமான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எரிபொருளுக்காக இன்று அதிகாலையில் இருந்து வாகனங்களும் பொதுமக்களும் எரிபொருள் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் நுவரெலியா நகரத்தில் உள்ள சமூக சேவகர்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக்கொள்ள வந்த வாகன சாரதிகள்,பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் இலவசமாக இலைக்கஞ்சிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.