
நுவரெலியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக உள்ள பேக்கரி நிறுவனத்தில் நேற்று முந்தினம் திங்கள் கிழமை இரவு திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பேக்கரியின் பின் பகுதியில் உள்ள ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பாண் மற்றும் பேக்கரியில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
நுவரெலியாவில் கடந்த சில மாதங்களில் தொடர்ந்து இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் பதிவாகிய வண்ணம் உள்ளதாகவும் ஆனால் இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப் படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.