
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு வழங்கி வரும் ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் வளர்ச்சி தொடர்பிலும் எதிர்காலத்தில் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பிலும் இந்திய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்