தேவையான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிவாயுவை நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேநேரம், தேவையான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 10 நாட்களில் 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை நாடுமுழுவதிலும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் 12 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயு எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீண்ட வரிசையில் காத்திருக்கின்ற போதிலும் தமக்கு சமையல் எரிவாயு கிடைக்கப்பெறவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *