அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கின்றனர் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள்!

அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர்.

தலதாமாளிகைக்கு சென்று மாகாநாயக்கர்களிடம் இன்று(வியாழக்கிழமை) அவர்கள் ஆசி பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளார்.

எவ்வாறாயினும், தமது கட்சியின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *