
கொழும்பு, மார்ச் 24
போதுமானளவு சமையல் எரிவாயு தமது கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவிக்கின்றது.
கெரவலபிட்டிய வளாகத்தில் போதுமானளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஸார ஜயசிங்க தெரிவிக்கின்றார்.
எதிர்வரும் 10 நாட்களில் ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும், நாட்டின் பல பகுதிகளில் நேற்றும் எரிவாயு சிலிண்டரை கொள்வனவு செய்வதற்கு மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தனர்.