
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்வெட்டு, எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றிரவு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் காலி வக்வெல்ல சந்தியில் நேற்று (23) இரவு இடம்பெற்றது.
தாங்கள் பட்டினியால் வாடுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் பலர் தீபம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே அரசாங்கம் உடனடியாக அதிகாரத்தை கைவிட்டு இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை காப்பாற்றக்கூடிய அரசாங்கத்தை நியமிக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.