ஓ.எல் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

க.பொ.த.சாதாரண பரீட்சைகள் குறித்த திகதியில் மாற்றம் இல்லாமல் நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

கடந்த ஆண்டுக்கான பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும்.வினாத்தாளுக்கு தேவையான கடதாசி கொள்வனவு தொடர்பில் சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த ஆண்டு விநியோகிக்க வேண்டிய பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டுள்ளன.

முதலாம் தவணை ஆரம்பமாகும்போது முழுமையாக பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகள் நிறைவடையும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *