குடும்பக் காட்,ஐ.சி காட்டினால் ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் – யாழில் இன்று இந்த நிலைமை

நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை அடுத்து,மக்கள் விநியோக நிலையங்களில் வரிசையில் காத்து நிற்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள எரிவாயு சிலிண்டர் விநியோக நிலையங்களில் எரிவாயு இல்லை என்ற பதாகைகள் தொங்க விடப்பட்டாலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதை அவதானிக்க கூடியதாக உள்ள்ளது.

இந்த நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் சாவகச்சேரியல் உள்ள பிரதான “Laugfs has” விநியோகத்தர் நிலையத்தில், குடும்ப பங்கீட்டு அட்டை மற்றும் அடையாள அட்டை பிரதிக்கு ஒன்று காஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது.இதனால் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *