விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கறுப்புப்பெட்டி மீட்பு

சீனாவின் விபத்துக்குள்ளான ஈஸ்டர்ன் எயார் லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சீனா விமானத்துறை நிர்வாக அதிகாரி மாவோ யான்ஃபெங் தெரிவித்துள்ளார்.

123 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் உட்பட 132 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்தனர்.

குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இதனால் அப்பகுதியில் தீ பரவியது. விபத்தில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள கறுப்புப் பெட்டி கடுமையாக சேதமடைந்துள்ளதால் தரவு தெளிவாக இல்லை எனவும் முக்கிய ஆதாரங்களை சேகரிப்பது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *