
திருகோணமலை மாவட்டம், தோப்பூர் – இத்திக்குளம் கிராம மக்கள் குடிநீர் இன்றி மிகவும் கஷ்டப்பட்டு வந்த நிலையில், முஸ்லிம் தனவந்தர்களின் நிதிப்பங்களிப்புடன் அவர்களுக்கான சுத்தமான குடிநீர் இணைப்பு இன்று வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். சுத்தமான குடிநீர் வசதிகள் இன்மையால் , பல கிரோமீற்றர் தூரம் பயணம் செய்து அசௌகரியங்களுக்கு மத்தியில் குடிநீரை பெற்றுவந்தனர்.
இந்த நிலையில் குடிநீர் தாகத்தை தீர்க்கும் வகையில், மர்ஹும் அல்ஹாஜ் முஹமட் அப்துல் காதர் பாவா, மர்ஹுமா ஹாஜியானி பத்ரியா பாவா ஆகியோரின் நினைவாக அவர்களின் குடும்பத்தாரின் நிதிப்பங்களிப்புடன் சுத்தமான குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தை ஆரம்பித்து நிறைவு செய்வதற்கு , சமூக சேவையாளர் தேசபந்து அல்ஹாஜ் றிஸ்வான் ஹாபீஸ் முன்னின்று மிகச் சிறப்பாக செயற்படுத்தியிருந்தார்.