வெளிநாடு சென்றால் மட்டும் பிரச்சினை தீராது – விவசாயி ஒருவரின் அறிவுரை இது

நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் மக்கள் நட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணத்தில் விவசாயி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:

அகதிகளாக நாட்டைவிட்டுவிட்டு வெளியேறி தமிழ்நாட்டில் சிலர் தஞ்சமடைந்துள்ள பிண்ணியில் பலர் நாட்டில் வாழ்வதற்கு வழியின்றி தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் நாட்டு மக்கள் பொருளாதார மோகம் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்றால் உழைக்கலாம் என்ற எண்ணம் கொண்டு தங்களது பொருளாதாரத்தினை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

இதனால் நாட்டின் தன்னிறைவுப் பொருளாதாரம் பாதிப்படைகிறது.மேலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஏனைய நாடுகளிடம் கையேந்தி நிற்காமல் நாட்டு மக்கள் சுயமாக உழைத்து தன்னிறைவு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *