
இலங்கையில் 50 வருடங்களின் பின்னர் சிமிழ் விளக்குகள் மற்றும் கரி அயன் பெட்டி ஆகியன பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
நாட்டில் தற்போது அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக மக்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அத்துடன் இவ்வாறான பொருட்கள் தற்போதும் சந்தைகளிலும் கிடைக்கிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த நிலைமையை மக்கள் எதிர் கொள்கின்றனர்.
எரியும் கரித்துண்டுகளை பயன்படுத்தி ஆடைகளை தேயக்கும் இஸ்திரி பெட்டிகள் 2000 ரூபாய்க்கும் சிமிழ் விளக்கொன்று 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.