
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை காரயங்களை , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இரண்டே வருடங்களில் செய்து முடித்து விட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் சபையில் நேற்று தெரிவித்துள்ளார்.
தமிழ்,சிங்கள ,முஸ்லீம் மக்கள் என அனைவருக்கும் நாட்டில் காணிகள் உள்ளன. ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது நீண்ட கால கனவாகவே காணப்படுகிறது.தோட்டத் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றதன் பின்னர் கூட அவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை.
வாக்குரிமை பெற்று ,வாக்களித்த பின்னரும் மக்கள் இப்போது வீதியில் நிற்கின்றனர்.
30 வருடங்கள் போர் நடைபெற்றும் பிரபாகரனால் நாடு இப்படி அழிவுக்கு உள்ளாக்கப்படவில்லை .ஆனால் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற இரண்டே வருடங்களில் நாட்டை அழித்துவிட்டார் என்பதுபோல ஒரு கேலிசித்திரத்தை நான் பார்த்தேன் என்றார்.