திராய்மடு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

தினமும் கவனயீனமான செயற்பாடுகளினால் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெறுகின்றது.கவனயீனத்தினால் உயிரொன்று பறிபோன துயரச்சம்பவம் மட்டக்களப்பில் பதிவியாகியுள்ளது.

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை மின்சாரத்தில் தாக்குன்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திராய்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன் என்னும் 22வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை வீட்டில் கதவு ஒன்றை பொருத்துவதற்காக பணியிலீடுபட்டுக்கொண்டிருந்தபோது மின்சாரத்தில் பொருத்தப்பட்டிருந்த துளையிடும் கருவியின் வயரானது கதவில் இணைக்கப்பட்டிருந்த தகரத்தில் பட்டிருந்த நிலையில் குறித்த தகரத்தில் துளையிடும் கருவியினால் துளையிட முயற்சித்தபோது மின்சாரத்தில் குறித்த இளைஞர் தாக்கப்பட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கப்பட்டர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்கான வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

உயிரிழந்த இளைஞன் கடந்த ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சித்திபெற்று பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.குறித்த இளைஞனின் மரணம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *