
கர்ப்பிணி மனைவி ஆசைப்பட்டதால் மாமனாரின் காணியில் பலாப்பழம் பறித்த இளைஞர், குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வடக்கு எல்பிட்டிய, எகொடகெதரவில் நடந்துள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.ஷொன் லசந்த ( வயது – 34 ) என்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்ப்பிணியாகவுள்ள மனைவி ஆசையாகக் கேட்டதை அடுத்து, மாமனாரின் காணியில் உள்ள பலாமரத்தில் பலாப்பழத்தை லசந்த பறித்துள்ளார். அதையடுத்து லசந்தவுடன் அவரது மாமனார் முரண்பட்டுள்ளார் என்றும், அதன்தொடர்ச்சியாக லசந்த கத்தியால் குத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யபபட்டுள்ளார் என்றும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.