ஈசி கேஸ் மூலம் போதைப்பொருள் வியாபாரம்: எட்டுபேர் கைது

ஹட்டன், மார்ச் 24

ஈசி கேஸ் முறையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் ஹட்டன்- கலால் அலுவலக அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20- 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. ஹட்டன் , தலவாக்கலை, கொட்டகலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஈஸி கேஸ் மூலம் ஹெரோயின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளதுடன், இவர்களுக்குள் ஐவரிடமிருந்து 1170 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் ஏனைய மூவரிடமிருந்து 4,800 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கலால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை ஹற்றன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *