பாடசாலை கற்றல் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக காகிதங்கள் பாடசாலை உபகரணங்களிற்கு பாரிய தட்டுப்பாடு நிலவிவருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் கடை உரிமையாளர் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்:

பாடசாலை உபகரணங்களின் தட்டுப்பாட்டால், விலை அதிகரித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் அதனை கூடிய விலையில் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

கடந்த காலங்களில் 5 கட்டு கொப்பி 120 ரூபாவாக காணப்பட்டது, தற்போது 165 ரூபாவாக காணப்படுகிறது.

அழிப்பான் தற்போது ரூ.15 க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. பாடசாலை உபகரணங்களை ஓடர் செய்யப்பட்டும் இன்னமும் பொருட்கள் கிடைக்கவில்லை என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *