
பாரியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் மீது தேவையான அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் அவர்கள் மீது கண்ணீர் புகை, நீர்த்தாரை மற்றும் மிளகுத்தூள் பிரயோகிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சில பொதுமக்களின் எதிர்ப்பினால் சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாகவே இவ்வாறு செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறான நடவடிக்கைக்கு இடமளிக்க மாட்டார்.
எதிர்ப்பாளர்கள் வரம்பு மீறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.