2015ம் ஆண்டிற்கு பின் டீசல் மாபியாக்கள் தலைதூக்க இடமளித்ததன் விளைவே இது! சானகா

அரசாங்கம் தவறு செய்யவில்லை என்றாலும், தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கம் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இராஜாங்க அமைச்சரான டி.வி. சானகா தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அரசாங்கம் எப்போதும் தனது நடவடிக்கைகளில் முன்னுதாரணமாக இருப்பதாகவும், வாகனங்கள் மற்றும் பண்டிகைகள் போன்ற தேவையற்ற விடயங்களுக்கு ஒருபோதும் பணத்தை வீணடிக்காது.

பொது மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு எப்போதும் நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளது, எங்களுக்குத் தெரியும்.

இது அரசாங்கத்தின் தவறு அல்ல என்றாலும், எரிவாயு வரிசைகள், எரிபொருள் வரிசைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை சுட்டிக்காட்டிய அவர், முன்னைய நிர்வாகம் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை கூட நிர்மாணிக்க தவறியதாகவும் சுட்டிக்காட்டினார்.
2015 ஆம் ஆண்டிற்கு பின்னர் டீசல் மாபியாக்கள் தலைதூக்குவதற்கு இடமளித்ததாகவும் இதன் விளைவாக இன்றைய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *