ஒளடத நன்கொடைகளுக்கு மாத்திரம் பெறுமதி சேர் வரி விலக்களிப்பு! வெளியானது அறிவிப்பு

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (24) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

வட் (VAT) எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்ட மூலம் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

பெறுமதி சேர் வரிச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரச நிதிப் பற்றிய குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

வரவு செலவுத்திட்டத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும், 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தவும் இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதிச் சேவை வழங்கலுக்கு பெறுமதி சேர் வரியானது 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

ஏதேனும், தொற்றுநோய் சூழல் அல்லது மக்களுக்கான அவசர சூழலின் போது அரச வைத்தியசாலைகள், சுகாதார அமைச்சு ஆகியனவற்றுக்கு வழங்கப்படும் வைத்திய உபகரணங்கள் மற்றும் ஒளடத நன்கொடைகளுக்கு மாத்திரம் பெறுமதி சேர் வரி விலக்களிப்பு செய்யப்படவுள்ளது.

நாட்டில் வரி வசூலிப்பில் அதிகரிப்பு அல்லது குறைப்புச் செய்வதாயின் அது குறித்து பொருளாதார மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அரச நிதி பற்றிய குழு உறுப்பினர்களின் நிலைப்பாடாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *