
பொன்னாலை இந்து மயானத்தை புனரமைக்கும் செயற்பாட்டில், எல்லைக் கட்டைகள் இடுகின்ற பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
பொன்னாலை இந்து மயானம் சேதமடைந்து பற்றைகள் சூழ்ந்து காணப்பட்டது.
இதைப் புனரமைக்க உதவுமாறு முகப்புத்தகம் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, காரைநகர் கருங்காலியை சேர்ந்த அமரர் கணேசமூர்த்தி இராஜேஸ்வரியின் நினைவாக புலம்பெயர் தேசத்தில் உள்ள அவரது உறவினர் லோ. ஸ்ரீகாந்தன் அனுப்பிய முதற்கட்ட நிதியுடன் இப்புனரமைப்பு 2022 ஜனவரி 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.