தோப்பூரில் வெடிக்காத நிலையில் மிதிவெடி மீட்பு

மூதூர் – தோப்பூர் இக்பால் நகர் பகுதியில் உள்ள வயல் வெளியிலிருந்து வெடிக்காத நிலையில் காணப்பட்ட மிதிவெடி ஒன்று இன்று வியாழக்கிழமை (24) மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தோப்பூர் – இக்பால் நகல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் , வயல் வெளியில் வெடிக்காத நிலையில் மிதிவெடி கிடப்பதைக்கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த மிதிவெடியானது தற்போது அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் மூதூர் நீதிவான் நீதிமன்றின் அனுமதியைப்பெற்று விசேட அதிரடிப்படையின் மூலமாக செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *