யாழில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை ?

யாழ். நகர் மத்தியபகுதியின் உணவுக் களஞ்சியப்பகுதியில் 38 வயது உடைய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் உள்ள, மத்திய பிரதான உணவுக்களஞ்சிய பகுதியின் ,ராஜா சினிமா திரையரங்கு முன்பாக குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி வேலைக்கு போய்வருவதாக வீட்டாருக்கு கூறி விட்டு சென்று, இரவு வரை வராத காரணத்தினால், தமது முறைப்பாட்டினை பொலிஸ் நிலையத்தில் குடும்ப உறவினர்கள் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவரின் உடலம் காணப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *