மன்னார் வளைகுடா கண்காணிப்பிற்கு இந்திய உலங்குவானூர்திகள் இணைப்பு

மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி பிராந்தியத்தில் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தவும், கடல்சார் தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்கு இரவும், பகலும் பயன்படுத்தக்கூடிய இரு உலங்குவானூர்திகள் இணைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள ஐஎன்எஸ் பருந்து தளத்திலேயே இந்த மேம்பட்ட இலகு ரக எம்.கே 3 வகை உலங்குவானூர்திகளே இணைக்கப்பட்டன.

ரஷ்ய தொழில்நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு இலகுரக உலங்குவானூர்திகள் ராமநாதபுரம் உச்சிபுளியில் அமைந்துள்ள ஐ.என்.எஸ் பருந்து இந்திய கடற்படை விமான நிலையத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டது

இந்த விழாவில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தா, ஐஎன்எஸ் பருந்துவின் கடற்படை வீரர்கள் முன்னிலையில் தண்ணீரைப் பிரயோகத்துடன் வரவேற்கப்பட்டன.

இந்த உலங்குவானூர்திகளில் அதிநவீன கடல்சார் ரோந்து ராடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் பேலோட் உள்ளதால் இது கண்காணிப்பு திறனை மேம்படுத்துகிறது.

இந்தத் திறன்கள் இந்தியக் கடற்படைக்கு அதன் செயல்பாட்டுத் திறனை மேலும் விரிவுபடுத்தவும், இந்தப் பிராந்தியத்தில் உள்ள நீர்நிலைகளில் கண்காணிப்பில் ஈடுபடவும் பெரிதும் உதவும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *