
கடவத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீது, அடையாளம் தெரியாத நபர்கள் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது
துப்பாக்கி பிரயோகத்தில் பேலியகொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதான இருவரே உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கடவத்தை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.