மூதூர் – இரால்குழி பாலத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை மூதூர் விசேட பொலிஸ் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது 5 கிராம் 100 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் மூதூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூதூர் – இரால் பாலத்தினூடாக பயணித்துக் கொண்டிருப்தாக மூதூர் விசேட பொலிஸ் பிரிவினர் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இடைமறித்து சோதனைக்கு உட்படுத்தியபோது ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

