துவிச்சக்கர வண்டி திருட்டு: பொலிஸார் முன் சென்றதால் கைது

யாழ்ப்பாணம், மார்ச் 25

யாழ்.நகர் பகுதியில் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்திருக்கின்றனர்.

யாழ்.மாநகரில் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் நிலையில்,  சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் துவிச்சக்கர வண்டி கொண்டு செல்வதை யாழ்.நகரில் சுற்றுகாவலில் இருந்த பொலிஸார் கண்டுள்ளனர்.

இதனையடுத்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்து சைக்கிள் திருடியமை கண்டறியப்பட்டுள்ளதோடு  கோப்பாய் தெற்கை சேர்ந்த 27 வயதான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *