
யாழ்ப்பாணம், மார்ச் 25
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட மூன்று அதி தீவிர நோய் தடுப்பு சிகிச்சை மையங்களில் உள்ள பொருட்கள் கணக்காய்வு அறிக்கையில் இருந்து தப்பி மாயமாகி உள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் கீழ் நாவற்குழி, மருதங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இவை வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் கீழ் கண்காணிக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் மருதங்கேணி இடைத்தங்கல் முகாமில் காணப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் தொலைக்காட்சிப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் என்பன அவை அப்புறப்படுத்திய பொழுது கணக்குப் புத்தகத்தில் வரவு விடப்படாமல் மாயமாகியுள்ளது. இதனால் பல மில்லியன் ரூபா பொருட்கள் சூறையாடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.