இலங்கைக்கு மேலும் இரு எரிபொருள் கப்பல்கள் வருகை

கொழும்பு, மார்ச் 25

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 12 நாட்களாக நங்கூரமிட்டிருந்த டீசல் ஏற்றிச் வந்த கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக 20,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த கப்பல் சுமார் 12 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்தது.

கப்பலின் உரிமையாளரான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தப்பட்டதை அடுத்து டீசலை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

35,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். குறித்த பெட்ரோல் தொகை இந்திய கடன் வசதியின் கீழ் பெறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *